டெல்லியை புரட்டிப்போட்ட 13 ஆண்டுகளில் இல்லாத மழை

டெல்லியை புரட்டிப்போட்ட 13 ஆண்டுகளில் இல்லாத மழை

1 mins read
c5c06faf-f40b-46e9-a04b-43723c95593a
பீகாரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: சனிக்­கி­ழமை பெய்த பலத்த மழை கார­ண­மாக டெல்லி­யில் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது. 13 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஆகஸ்ட் மாதம் இவ்­வாறு கன­மழை பெய்­த­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

டெல்­லி­யில் வெள்­ளிக்­கி­ழமை இரவு முதல் பெய்­யத் தொடங்­கிய மழை, விடிய விடிய கொட்­டித் தீர்த்­தது.

24 மணி நேரத்­தில் 139 மில்­லி­மீட்­டர் அள­வி­லான மழை பதி­வா­ன­தாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்­தது.

இதுவே, கடந்த 13 ஆண்­டு­களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்­தில் பதி­வான அதி­க­பட்ச மழை என்று குறிப்­பிட்­டுள்ள அம்­மை­யம், டெல்­லி­யில் மிக அதி­கபட்­ச­மாக 1961ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 184 மில்­லி­மீட்­டர் மழை பெய்­த­தாக அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

கன­ம­ழை­யால் பல பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­த­தை­ய­டுத்து போக்கு­வ­ரத்­தும் மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யும் பாதிக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் சில தினங்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்­ச­ரித்­துள்­ளது. மேலும் 'ஆரஞ்ச்' குறியீட்டு எச்­ச­ரிக்கையும் விடுக்­கப்­பட்டு உள்­ளது.

இதற்­கி­டையே பீகா­ரி­லும் கன­மழை நீடித்து வரு­கிறது. அங்கு வெள்­ளிக்­கி­ழமை பெய்த பலத்த மழை கார­ண­மாக 26 மாவட்­டங்­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.