13 ஆண்டுகால சிறை வாசத்துக்குப் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்ட தம்பதி

13 ஆண்டுகால சிறை வாசத்துக்குப் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்ட தம்பதி

2 mins read
caa93ef4-4647-42d0-8e38-aaaf99ca5356
-

போபால்: மத்­திய பிர­தேச மாநிலத்­தைச் சேர்ந்­த­வர் ராஜு யாத். கடந்த 2008ஆம் ஆண்டு பணத் தக­ராறு கார­ண­மாக இவர் தன் உடன்பிறந்த சகோ­த­ரரைக் கொலை செய்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

பின்­­னர் இவ­ரது மனைவி சகோத்ரா பாயும் கைதா­னார். இரு­வ­ருக்­கும் இந்த வழக்­கில் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சகோத்ரா பாய்க்கு பிணை கிடைக்க, ராஜூ சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

இத்­தம்­ப­தி­ய­ரின் மூன்று குழந்தை­களும் பெற்­றோ­ரின் தொடர் பரா­ம­ரிப்­பும் அன்­பும் இன்றி தவித்­த­னர்.

இந்­நி­லை­யில் 13 ஆண்­டு­களுக்­குப் பிறகு ராஜு தாக்­கல் செய்­தி­ருந்த மேல் முறை­யீட்டு மனுவை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம், குற்­றம்­சாட்­டப்­பட்ட இரு­வ­ரை­யும் நிர­ப­ரா­தி­கள் எனத் தீர்ப்­ப­ளித்து விடு­தலை செய்­தது.

சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­போது ராஜு­வுக்கு 48 வயது. அவ­ரது மனை­விக்கு 45 வயது. ஏழு முதல் 15 வய­துக்­குட்­பட்ட இவர்­க­ளது மூன்று குழந்­தை­களும் படிப்பை கைவிட நேர்ந்­தது. பின்­னர் இரு குழந்­தை­கள் கடை­களில் வேலை பார்த்து சம்­பா­தித்­ததை வைத்து நாள்­க­ளைக் கழித்­துள்­ள­னர்.

கடந்த 19ஆம் தேதி சிறை­யில் இருந்து விடு­த­லை­யா­னார் ராஜு. தம்­மை­விட மூன்று குழந்­தை­களும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"என் பிள்­ளை­க­ளின் குழந்­தைப் பரு­வம் பறி­போ­னது. கல்­வியை இழந்­த­னர். பசி­யும் பட்­டி­னி­யு­மாய் தவித்­த­னர். கொலை­கா­ரர்­க­ளின் பிள்­ளை­கள் என்ற பேச்­சுக்­கும் ஆளா­கி­னர். என் மீதான பொய்­யான குற்­றச்­சாட்டு கார­ண­மாக எனது வாழ்­வின் 13 ஆண்­டு­களை இழந்­து­விட்­டேன். இந்த இழப்பை யார் ஈடு செய்­வார்­கள்," என்று கேள்வி எழுப்­பு­கி­றார் ராஜு.

மாநில அரசு இவ­ருக்கு உதவ வேண்­டும் என பலர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.