பஞ்சாப்: விவசாயிகள் போராட்டத்தால் சாலை, ரயில் போக்குவரத்து நிலைகுத்தியது

பஞ்சாப்: விவசாயிகள் போராட்டத்தால் சாலை, ரயில் போக்குவரத்து நிலைகுத்தியது

1 mins read
ce7754fd-5df8-461b-907c-88e557668aab
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். படம்: ஊடகம் -

ஜெய்ப்­பூர்: கரும்பு விலையை உயர்த்த வேண்­டும், நிலு­வைத்­தொகை ரூ.250 கோடியைக் கொடுக்க வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்கை­களை முன்­வைத்து பஞ்சாப் மா­நில விவ­சா­யி­கள் கால­வ­ரையறை அற்ற போராட்­டத்தை துவங்கி உள்­ள­னர்.

மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு பகு­தி­களில் நடை­பெ­றும் மறி­யல் போராட்­டங்­களில் விவ­சா­யி­கள் திர­ளா­கப் பங்­கேற்று வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மாக சாலை, ரயில் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது.

இது­வரை மொத்­தம் 69 ரயில்­கள் ரத்­தாகி உள்­ளன என்­றும் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட ரயில்­கள் மாற்­றுப் பாதையில் திருப்பி­வி­டப்­பட்­டன என்றும் ரயில்வே துறை அறி­வித்­துள்­ளது. சில ரயில்­கள் ஆங்­காங்கே பாதி வழி­யில் நிறுத்­தப்­பட்­ட­ன.

இதே­போல் பல்­வேறு நக­ரங்­க­ளின் முக்­கிய பகு­தி­களில் மறி­யல் போராட்­டங்­களில் ஈடு­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள், சாலை­களில் தடை­களை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கோரிக்­கை­களை அர­சாங்கம் ஏற்­கும் வரை போராட்­டத்தை கைவிடப் போவ­தில்லை என்­று விவசாயிகள் தரப்­பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய அர­சின் புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து புது­டெல்­லி­யில் பல மாதங்­க­ளாக நீடித்து வரும் தொடர் போராட்­டங்­களில் பஞ்­சாப் மாநில விவ­சா­யி­கள் திர­ளா­கப் பங்­கேற்­ற­னர். இப்­போது சொந்த மாநி­லத்­தில் போராட்­டத்தை தொடங்கியுள்ளனர்.