கேரளா: தொற்று 3வது அலை எச்சரிக்கை

கேரளா: தொற்று 3வது அலை எச்சரிக்கை

2 mins read
ebc1e4bc-c803-45c4-9adc-ec70d248ed68
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ். படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: கேர­ளா­வில் தின­சரி கொரோனா தொற்று 24,000ஐத் தாண்டி உள்­ளது. இந்­நி­லை­யில் அடுத்த நான்கு வாரங்­க­ளுக்கு மக்­கள் மிக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு கேரள சுகா­தா­ரத்­துறை கேட்­டுக் கொண்­டுள்­ளது. கேர­ளா­வில் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கட்­டுப்­பா­டு­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

கேரள மாநி­லத்­தில் தொற்று அதி­க­ரிப்­ப­தால் அங்­குள்­ளோர், அண்டை மாநி­லங்­க­ளான தமி­ழ­கம் கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­க­ளுக்­குச் செல்ல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

கேர­ளா­வில் கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்த மத்­திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்­தி­யது. கட்­டுப்­பா­டு­களைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என கேரள அர­சுக்கு மத்­திய குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

கேர­ளா­வில் கொவிட் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த வார இறுதி நாட்­களில் முழு ஊர­டங்கு அம­லில் இருந்­தது. ஓணம் பண்­டி­கையை முன்­னிட்டு ஊர­டங்­கில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அதன்­படி கடந்த ஞாயிற்­றுக்­கிழமை ஊர­டங்­கில் விலக்கு அளிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் கேர­ளா­வில் மீண்­டும் தின­சரி தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்து உள்­ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 24,296 பேர் புதி­தாக தொற்றுப் பாதிப்­புக்கு உள்­ளா­கி­னர். நோய் பாதித்த 173 பேர் மர­ணம் அடைந்­து­விட்­ட­னர். மாநி­லம் முழு­வ­தும் பாதிக்­கப்­ப­டு­வோர் விழுக்­காடு 18.04 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக நாடு­மு­ழு­வ­தும் 37,593 பேருக்­குக் தொற்று ஏற்­பட்­டுள்ள நிலை­யில் அதில் கேர­ளா­வில் மட்­டும் 24,296 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதை­ய­டுத்து மீண்­டும் தீவிர கட்­டுப்­பா­டு­களை விதிக்க கேரள அரசு முடிவு செய்­துள்­ளது. இது­கு­றித்த கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் கூறு­கை­யில், ''கொவிட் 3வது அலை ஏற்­பட வாய்ப்பு உள்­ள­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்து உள்­ள­னர். எனவே ஞாயிற்­றுக்­கி­ழமை மாநி­லம் முழு­வ­தும் முழு ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­ப­டு­கிறது. பொது­மக்­கள் இதைக் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்­டும்,'' என்­றார்.

இது­கு­றித்து சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ் கூறி­ய­தா­வது:

பொது­மக்­க­ளைக் காக்க வேண்­டிய பொறுப்பு அர­சுக்கு உள்­ளது. மற்­றொரு முடக்­க­நி­லையை அமல்­படுத்­து­வது சாத்­தி­ய­மல்ல. ஓணம் விடு­மு­றைக்­குப் பிறகு கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

எனவே, அடுத்த நான்கு வாரங்­களில் மக்­கள் மிக­வும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும். வர­வி­ருக்­கும் மூன்­றாம் அலை தொற்று அச்­சு­றுத்­தலை மக்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.

மூன்­றா­வது அலையைக் கருத்­தில் கொண்டு மருத்­து­வ­ம­னை­களில் ஆக்­சி­ஜன் படுக்­கை­கள் மற்­றும் தீவிர சிகிச்சை பிரி­வு­கள் அமைக்க சுகா­தா­ரத்­துறை ஏற்­கெனவே ஏற்­பா­டு­கள் செய்­துள்­ளது. சுவா­சக் கரு­வி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­ம­னை­களில் உள்ள தீவி­ரக் கண்­கா­ணிப்­புப் பிரி­வு­களை மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளு­டன் இணை­யம் வழி இணைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மாநி­லத்­தி­லும் தடுப்­பூசி போடும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று அமைச்­சர் வீணா ஜார்ஜ் கூறி­னார்.