மாணவர்களுக்குத் தொற்று: இரண்டு பள்ளிகள் மூடல்

1 mins read
29ffaed8-efd6-427b-98d1-90c8e8062f2a
-

ஹைதராபாத்: ஆந்­திர மாநி­லத்­தில் கொரோனா தொற்று குறைந்து வரு­வதை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி அரசு மற்­றும் தனி­யார் பள்­ளி­களும் தொடக்­கக் கல்­லூ­ரி­களும் திறக்­கப்­பட்­டன.

இந்­நி­லை­யில் பள்­ளி­கள் திறக்­கப்­பட்ட ஒரு வாரத்­தி­லேயே கிருஷ்ணா மாவட்­டம், மடி­னே­பள்ளி பகு­தி­யில் 2 அர­சுப் பள்­ளி­க­ளி­ல் படிக்­கும் ஒன்­பது மாண­வர்­க­ளுக்கு கொரோனா தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதில் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் 8 பேருக்­கும் தொடக்­கப் பள்­ளி­யில் 3ஆம் வகுப்பு படிக்­கும் மாண­வர் ஒரு­வ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து நேற்று முதல் அந்­தப் பள்­ளி­க­ள் இரண்டு நாள்­க­ளுக்கு மூடப்­பட்­டுள்­ளது. பரி­சோ­த­னை­யில் மேலும் மாண­வர்­க­ளுக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டால் பள்ளி தொடர்ந்து மூடப்­படும் என்று மாவட்­டக் கல்­வித்­துறை தெரி­வித்­துள்­ளது.

ஆந்­திர மாநி­லத்­தில் நேற்று தின­ச­ரித் தொற்று 1,248ஆக பதி­வா­கி­யுள்­ளது. இத­னு­டன் சேர்த்து அங்கு மொத்­தம் 20 லட்­சத்து 4,590 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த 24 மணி நேரத்­தில் மொத்­தம் 1,715 பேர் தொற்­றுப் பாதிப்­பில் இருந்து குண­மடைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். 15 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன என்று ஆந்­திர சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. குண­ம­டை­வோர் எண்­ணிக்கை 19,77,163ஆக அதி­க­ரித்­துள்­ளது. 13,750 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.