தினமும் ஐந்து பீட்சா: பெண்ணுக்கு நூதன தொல்லை

தினமும் ஐந்து பீட்சா: பெண்ணுக்கு நூதன தொல்லை

1 mins read
6cb94852-a0c6-4d3c-8c5c-543473dd9643
-

பெங்­களூரு: 'ஃபேஸ்புக்' மூலம் அறி­மு­க­மாகி தனக்­குப் பல­வி­த­மாக தொல்லை கொடுத்து வரும் இளை­யர் மீது 36 வய­தான ராதிகா என்ற பெண் போலி­சில் புகார் அளித்­துள்­ளார்.

பெங்­க­ளூரைச் சேர்ந்­த அவர், தக­வல் தொழில்நுட்ப நிறு­வன மேலா­ள­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

இந்­நி­லை­யில் சத்­தீஸ்­கரைச் சேர்ந்த மணீஷ்­கு­மார் என்­ப­வர் 'ஃபேஸ்புக்' மூலம் ராதி­கா­வுக்கு அறி­மு­க­மா­னார். அவ­ரு­டன் இயல்­பா­கப் பழகி வந்த நிலை­யில், திடீ­ரென தம்மை திரு­ம­ணம் செய்து கொள்ள விருப்­பம் உள்­ளதா என்று மணீஷ்­கு­மார் கேட்க, தமக்கு அதில் விருப்­பம் இல்லை என மறுத்­துள்­ளார் ராதிகா.

ஆனால் அதன் பிறகு மணீஷ்­கு­மா­ரின் போக்­கில் மாற்­றம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இத­னால் அவரது பெயரை தனது 'ஃபேஸ்புக்' கணக்­கில் இருந்து நீக்­கி­னார். ஆனால் மணீஷ்­கு­மார் அவரை விடு­வ­தாக இல்லை.

ராதி­கா­வின் நட்பு வட்­டத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு மோச­மான குறுந்­த­க­வல்­கள் அனுப்­பு­வது, அவரைப் பற்றி மோச­மாக விமர்­சிப்­பது என்று பலவிதமாக தொல்லை கொடுத்­துள்­ளார்.

"கடந்த ஒரு மாத­மாக வேறோரு முறை­யி­லும் குடைச்­சல் தரு­கி­றார் மணீஷ்­கு­மார். தின­மும் நான் இருப்­பது வீட்­டிலா அல்­லது அலு­வ­ல­கத்­திலா என்­பதை தெரிந்து கொண்டு, என் பெய­ரில் ஐந்து பீட்சாக்கள் ஆர்­டர் செய்­கி­றார். வீட்­டிற்கு நேர­டி­யாக வந்து அவற்­றைக் கொடுப்­ப­வ­ரி­டம் அதற்­கு­ரிய தொகையை செலுத்த வேண்­டும். இத­னால் நான் வலுக்­கட்­டா­ய­மாக பணம் செல­விட வேண்­டி­யுள்­ளது. இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என ராதிகா தமது புகார் மனு­வில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.