'குவாட்' உறுப்பு நாடுகளின் கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் இந்தியா பங்கேற்பு

'குவாட்' உறுப்பு நாடுகளின் கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் இந்தியா பங்கேற்பு

1 mins read
b533196f-3955-47e5-ae1e-7237faeeeea5
-

புது­டெல்லி: 'குவாட்' அமைப்பு நாடு­கள் இடை­யே­யான 'மல­பார்' கடற்­படை கூட்­டுப் போர் பயிற்சி தொடங்­கி­யது.

இந்த ஆண்டு இந்­தப் பயிற்சி 'குவாம்' நாட்டு கடற்­ப­கு­தி­யில் நான்கு நாள்­கள் நடைபெறுகிறது.

'குவாட்' அமைப்­பில் இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்தி­ரே­லியா ஆகிய நான்கு நாடு­கள் இடம்­பெற்­றுள்­ளன. இந்­நா­டு­கள் இணைந்து ஆண்­டு­தோ­றும் கூட்டுப் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­கின்­றன.

கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 'மல­பார்' கடற்­படை கூட்­டுப் போர் பயிற்சி நடை­பெற்­றது. தொடக்­கத்­தில் அமெ­ரிக்­கா­வும் இந்­தி­யா­வும் மட்­டுமே பயிற்சி மேற்­கொண்­டன. அதன் பிறகு ஜப்­பா­னும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இணைந்­தன.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அதி­க­ரித்து வரும் சீனா­வின் ஆதிக்­கத்­தைக் குறைக்­கும் வகை­யில் 'குவாட்' நாடுகள் செயல்­ப­டு­கின்­றன. ஆண்­டு­தோ­றும் இந்­தப் பயிற்சிக்­கான ஏற்­பா­டு­களை அமெ­ரிக்­கக் கடற்­படை செய்­கிறது.

நிலத்­தி­லும் நீரி­லும் வான் பரப்­பி­லும் மிகக்­க­டி­ன­மான பயிற்சி மேற்­கொள்ள 'குவாட்' நாடுகள் விரும்­பு­வ­தாக இந்­திய கடற்­படை தெரிவித்­துள்­ளது.

இதன்­மூ­லம் ஒரு நாட்­டின் அனு­ப­வத்­தை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் மற்ற நாடு­களும் பெற முடி­யும் என்­றும் இது பய­னுள்ள பயிற்­சி­யாக அமை­யும் என்­றும் இந்­தி­யக் கடற்­படை செய்­தித் தொடர்­பா­ளர் விவேக் மத்­வால் நேற்று முன்தினம் தெரி­வித்­தார்.

நேற்று முன்­தி­னம் தொடங்­கிய மல­பார் கடற்­படை கூட்­டுப் போர் பயிற்­சி­யில் போர் கப்­பல்­கள், விமா­னங்­கள், ஹெலி­காப்­டர்­கள் ஆகி­யவை பங்­கேற்­கின்­றன.

மிக­வும் சிக்­க­லான பயிற்­சி­களில் வீரர்­கள் ஈடு­ப­டு­வர் என்­றும் கடல்­சார் உளவு விமா­ன­மும் பயிற்­சி­யில் பங்­கேற்க உள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.