மலேசியா: சுகாதார அமைச்சராக கைரி நியமிப்பு

மலேசியா: சுகாதார அமைச்சராக கைரி நியமிப்பு

2 mins read
c07a056b-366f-422a-ba7f-d0cdc9d60e30
-
multi-img1 of 3

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஒன்­ப­தா­வது பிர­த­ம­ராக அண்­மை­யில் பொறுப்­பேற்ற இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், நேற்­றுக் காலை தமது அமைச்­ச­ர­வைப் பட்­டி­யலை வெளி­யிட்­டார்.

முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசி­னைப் போலவே, திரு இஸ்­மா­யி­லின் முதல் அமைச்­ச­ர­வைப் பட்­டி­ய­லி­லும் துணைப் பிர­த­ம­ராக எவ­ரும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

திரு இஸ்­மா­யி­லின் அம்னோ கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே அமைச்­ச­ர­வைப் பட்­டி­ய­லில் ஆதிக்­கம் செலுத்­து­கின்­ற­னர். மூத்த அமைச்­சர்­கள் நால்­வர் உட்­பட 31 அமைச்­சர்­களும் 38 துணை அமைச்­சர்­களும் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

அனைத்­து­லக வர்த்­தக, தொழில் அமைச்­சர் அஸ்­மின் அலி. தொழி­லக அமைச்­சர் ஃபதில்லா யூசோஃப், கல்வி அமைச்­சர் ரட்ஸி ஜிதின், தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஹுசேன் ஆகிய மூத்த அமைச்­சர்­கள் தங்­க­ளது பத­வி­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ள­னர்.

கடந்த ஆட்­சி­யில் அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­சரா­கச் செயல்­பட்ட கைரி ஜமா­லு­தீன், புதிய சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். சுகா­தார அமைச்­ச­ராக இருந்த டாக்­டர் ஆதம் பாபா, புதிய அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­க­வுள்­ளார்.

புதிய அமைச்­ச­ர­வை­யில் இந்­தி­யர் இரு­வர் இடம்­பெற்­றுள்­ள­னர். மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் துணைத் தலை­வர் எம் சர­வ­ணன், மனி­த­வள அமைச்­ச­ரா­கத் தொட­ர­வுள்­ளார். பெர்­சத்து கட்­சி­யைச் சேர்ந்த எட்­மண்ட் சந்­தாரா, சுற்­றுலா, கலை, பண்­பாட்­டுத் துணை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.

அமைச்­ச­ர­வை­யில் ஒன்­பது பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

"கொவிட்-19 பர­வ­லுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்து எழ­வும், அப்­பெ­ருந்­தொற்று கார­ண­மாக இன்­னல்­களில் இருந்து மலே­சி­யக் குடும்­பங்­களை மீட்­க­வும் நாட்­டிற்கு இந்த அமைச்­ச­ரவை புதிய நம்­பிக்­கையை அளிக்­கும் என்று நம்­பு­கிறேன்," என்று திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

ஒவ்­வோர் அமைச்­சும் பொறுப்­பேற்ற நூறு நாள்­க­ளுக்­குள் தங்­களது சாத­னை­களை மெய்ப்­பிக்க வேண்­டும் என்­றும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

'புதிய மொந்­தை­யில் பழைய கள்'

இத­னி­டையே, முந்­திய அமைச்­ச­ர­வை­யைப் போலவே புதிய அமைச்­சரவை இருப்­பது குறித்து எதிர்க்­கட்­சி­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­ன.

புதிய அமைச்­ச­ர­வையை 'மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட அமைச்­ச­ரவை' எனக் குறிப்­பிட்ட ஜன­நா­ய­கச் செயல் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் லிம் குவான் எங், பழைய கள்­ளைப் புதிய மொந்­தை­யில் ஊற்றித் தரு­வ­தற்­கும் இதற்­கும் எந்த வேறு­பா­டும் இல்லை என்­றும் சொன்­னார்.

இன்­னும் பதி­வு­செய்­யப்­ப­டாத 'மலே­சிய ஐக்­கிய ஜன­நா­ய­கக் கூட்­டணி'யின் தலை­வ­ரான சையது சாதிக் சையது அப்­துல் ரகு­மான், உண்­மை­யான நிறு­வ­னச் சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பை திரு இஸ்­மா­யில் வீண­டித்­து­விட்­ட­தா­கக் கருத்­து­ரைத்­துள்­ளார்.