தாய்லாந்தில் உணவகங்களும் கடைத்தொகுதிகளும் திறப்பு

தாய்லாந்தில் உணவகங்களும் கடைத்தொகுதிகளும் திறப்பு

1 mins read
3ba473ee-ac0f-4015-997b-407ff5862f3e
-

பேங்­காக்: கொவிட்-19 பாதிப்பு குறை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வதை அடுத்து, அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி­யில் இருந்து கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த தாய்­லாந்து முடி­வு­செய்­துள்­ளது.

அதன்­படி, அதிக இடங்­க­ளுக்கு பய­ணம் செய்­ய­வும் உண­வ­கங்­கள், கடைத்­தொ­கு­தி­க­ளைத் திறக்­க­வும் அனு­ம­திக்­கப்­படும்.

இப்­போது அதி­க­பட்­சம் ஐவர் மட்­டுமே ஒன்­று­கூட முடி­யும் நிலை­யில், அவ்­வ­ரம்பு 25 பேராக உயர்த்­தப்­ப­டு­கிறது. உள்­நாட்டு விமா­னங்­கள் மீண்­டும் இயக்­கப்­படும். கடும் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பி­லி­ருக்கும் 29 மாநி­லங்­களில் பொதுப் பூங்­காக்­கள் மீண்­டும் திறக்­கப்­படும்.

நாளொன்­றுக்கு 20,000 பேர் என்ற அள­வி­லேயே புதிய பாதிப்பு­கள் இருந்­து­வ­ரும் வேளையில், இந்­தத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டுள்­ளன.

'கொவிட்-19 உடன் வாழ்­வது' என்ற உத்­தியை அர­சாங்­கம் கடந்த வாரம் கோடி­காட்­டி­யி­ருந்த நிலை­யில், அதன் ஒரு பகு­தி­யாக பிர­த­மர் தலை­மை­யி­லான குழு இந்­தத் தளர்­வு­க­ளுக்­குப் பச்­சைக்­கொடி காட்டி இருக்­கிறது.