விமானிக்கு திடீர் மாரடைப்பு

விமானிக்கு திடீர் மாரடைப்பு

2 mins read
1f49a4ff-8abc-4815-92e5-5ae0cbafb479
-

புது­டெல்லி: மஸ்­கட்­டி­லி­ருந்து டாக்­கா­வுக்­குப் பறந்துகொண்­டி­ருந்த பங்ளாதேஷ் 'பீமன்' பய­ணி­கள் விமா­னத்தில் விமா­னிக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தால் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­ட­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

வெள்­ளிக்­கி­ழமை காலை 11.00 மணி­ய­ள­வில் இந்தியாவில் உள்ள நாக்­பூ­ரில் அந்த விமா­னம் தரை­யி­றக்­கப்­பட்­டது.

அதில் 126 பய­ணி­கள் இருந்­த­னர்.

இந்­தியா வழி­யாக சென்­று­கொண்­டி­ருந்த விமா­னம் கோல்­கத்­தாவை நெருங்­கி­ய­போது, விமா­னிக்கு மார­டைப்பு ஏற்­பட்­டுள்­ள­தால் அவ­ச­ர­மாக தரை­யி­றக்க அனு­ம­திக்க வேண்­டும் என்று கட்­டுப்­பாட்டு அறை­யு­டன் தொடர்­பு­கொண்ட மற்­றொரு விமானி கேட்டுக்கொண்­டார்.

ஆனால் விமா­னம் நாக்­பூர் அருகே இருந்­த­தால் நாக்­பூர் விமான நிலை­யத்­தில் இறக்­கும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டது.

கோல்­கத்தா கட்­டுப்­பாட்டு அறை­யும் நாக்­பூர் விமான நிலை­யத்­துக்கு தக­வல் கொடுத்­தது.

பங்­ளாே­தஷ் விமா­னி­யும் இது தொடர்­பாக நாக்­பூர் விமான நிலை­யத்துடன் தொடர்புகொண்டார்.

இதையடுத்து நாக்­பூர் விமான நிலை­யத்­தில் அவ­சரநிலை அறி விக்கப்பட்டு அவசர சிகிச்சை வாகனங்கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டன.

விமா­னம் எந்­த­வித பிரச்­சி­னை­யும் இன்றி பத்­தி­ர­மாக நாக்­பூர் விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­யது.

உடனே விமா­னத்­தில் இருந்த விமானி, ஆம்­பு­லன்ஸ் மூலம் மருத்து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

துணை விமானி உரிய நேரத்­தில் விமா­னத்தை நாக்­பூ­ரில் தரை­யி­றக்­கி­ய­தால் 126 பய­ணி­களும் உயிர் தப்­பி­னர்.

விமா­னிக்கு நாக்­பூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இதற்­கி­டையே நாக்­பூ­ருக்கு வந்த 'பீமன்' விமா­னத்­தின் அதி­கா­ரி­கள், பய­ணி­களை மாற்று விமா­னத்­தில் பங்­ளா­தே­ஷுக்கு அனுப்பி வைத்­த­னர்.

கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக 'பீமன்' பங்­ளா­தேஷ் விமான நிறு­வ­னம், இந்­தி­யா­வுக்­கான விமானச் சேவையை நிறுத்­தி­யி­ருந்­தது. அண்­மை­யில் அந்­நி­று­வ­னம் இந்­தி­யா­வுக்­கான சேவை­யைத் தொடங்­கி­யது.