'பாஜக வருமானம் கூடியது, ஆனால்': ராகுல் காந்தி

1 mins read
f2826f8d-056b-485e-ab88-98e352505c89
-

புது­டெல்லி: தேர்­தல் நிதி பத்­தி­ரங்­கள் மூலம் பாஜ­க­வின் வசூல் வரு­மா­னம் ஐம்­பது விழுக்­காடு கூடி­உள்­ளது.

ஆனால் மக்­க­ளு­டைய வரு­மா­னம் அதி­க­ரிக்கவில்­லையே என்று காங்­கி­ரஸ் எம்.பி ராகுல்­காந்தி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

மத்­திய அர­சின் கொள்கை மற்றும் திட்­டங்­களை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்­சித்து வரு­கி­றார்.

அந்த வகை­யில், 2019-20 தேர்­தல் நிதி பத்திரங்­கள் மூலம் பாஜ­க­வின் வசூல் வரு­மா­னம் ஐம்­பது விழுக்­காடு உயர்ந்­துள்­ள­து­டன் மொத்­தம் ரூ.3,623,28 கோடி வரு­மா­னம் கிடைத்­துள்­ளது. ஆனால், கட்­சி­யின் வரு­மா­னம் உயர்ந்­தா­லும் மக்­க­ளின் வரு­மா­னம் உய­ர­வில்­லையே," என்று ராகுல்­ காந்தி பதி­விட்டு உள்­ள­தாக தினத்­தந்தி நாளிதழ் தெரி­வித்­தது.