அசாமில் நீடிக்கும் மழை, வெள்ளப்பெருக்கு: 243 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது

அசாமில் நீடிக்கும் மழை, வெள்ளப்பெருக்கு: 243 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது

1 mins read
0ca41e81-a6d2-465d-9d58-5734fea6c5cf
-

கவு­ஹாத்தி: வட இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு மாநி­லங்­களில் பருவ மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­நி­லை­யில் அசா­மில் வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக கடும் சேதங்­கள் ஏற்­பட்­டுள்­ளன.

அங்கு பெய்து வரும் கன­ம­ழை­யால் 11 மாவட்­டங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 133,330 பேர் தாழ்­வான பகு­தி­களில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மொத்­தம் 243 கிரா­மங்­களை வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது. அவற்றை இணைக்­கும் சாலை­கள் கடும் சேத­ம­டைந்­துள்­ளன. பதி­னாறு கிரா­மங்­கள் பிற பகு­தி­களில் இருந்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

எனி­னும் இந்த கன­ம­ழைக்கு இது­வரை யாரும் பலி­யா­கவில்லை என அர­சுத்­த­ரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கனமழை முடிவுக்கு வரும் வரை மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.