பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை

பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை

1 mins read
f2cf9fec-2f7a-4dec-908d-31f86bbe330c
ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் முதல்வர் பசவராஜ் பொம்மை. படம்: தமிழக ஊடகம் -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.

அங்­குள்ள நாயண்­ட­ஹள்ளி- கெங்­கேரி இடை­யே­யான ரயில் சேவையை அம்­மாநில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை நேற்று தொடங்கிவைத்­தார்.

மொத்­தம் 42 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு இயக்­கப்­படும் இந்த புதிய சேவை நீட்டிப்புக்­கான பணி­கள் ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் தொடங்­கின. முதற்­கட்ட பணி­கள் முடி­வ­டைந்­த­தும் பெங்­க­ளூ­ரில் நாக­சந்­திரா முதல் நாயண்­ட­ஹள்ளி பகுதி வரை மெட்ரோ ரயில்­கள் இயக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து இரண்­டாம் கட்­டப் பணி­கள் இப்­போது முடி­வுக்கு வந்­துள்­ளன. இப்­போது ரூ.1,920 கோடி செல­வில் நாயண்­ட­ஹள்­ளி­யில் இருந்து கெங்­கேரி வரை 7.5 கிலோ மீட்­டர் நீளத்­திற்குப் பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­க­டிக்கு மத்­தி­யி­லும் மெட்ரோ ரயில் திட்­டப் பணி­கள் முடி­வ­டைந்­தி­ருப்­பதை அடுத்து அதி­கா­ரி­க­ளுக்­குப் பாராட்டு தெரி­வித்­துள்­ளார் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை.