அடுத்த அலையை எதிர்கொள்ள டெல்லி தயார்; தொற்றை குறைக்க போராடும் மாநிலங்கள்

அடுத்த அலையை எதிர்கொள்ள டெல்லி தயார்; தொற்றை குறைக்க போராடும் மாநிலங்கள்

2 mins read
1f0868c0-9641-4b83-b844-b62c61a4cdf9
-

புது­டெல்லி: கொரோனா மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள டெல்லி தயா­ராகி வரு­வ­தாக அதன் சுகா­தார அமைச்­சர் சத்­யேந்­திர ஜெயின் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நட­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், பெருந்­தொற்று காலத்­தில் உயிர்த் தியா­கம் செய்த மருத்­து­வர்­க­ளுக்கு நன்­றிக்­க­டன் பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"அத்­த­கைய மருத்­து­வர்­க­ளின் பெயர்­கள் பொன் எழுத்­துக்­க­ளால் பொறிக்­கப்­படும். கொரோ­னா­வுக்கு எதி­ராக மக்­கள் அலட்­சி­ய­மாக இருக்­கக் கூடாது.

"கொரோனா தடுப்பு விதி­களை முழு­மை­யாக பின்­பற்ற வேண்­டும். மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள அரசு முழு வீச்­சில் தயா­ராகி வரு­கிறது," என்­றார் சத்­யேந்­திர ஜெயின்.

டெல்­லி­யில் கடந்த சில தினங்­க­ளாக தொற்­றுப் பாதிப்பு வெகு­வாக கட்­டுக்­குள் வந்­துள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

மற்ற மாநில நில­வ­ரங்­கள்:

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தி­னம் அன்­றாட தொற்று எண்­ணிக்கை மீண்­டும் ஐந்து ஆயி­ரத்­துக்­கும் குறை­வா­கப் பதி­வா­னது. ஒரே நாளில் மேலும் 126 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

உயி­ரி­ழப்பு விகி­தம் 2.12 விழுக்­கா­டாக உள்­ளது. தலை­ந­கர் மும்­பை­யில் புதி­தாக மேலும் 850 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் நேற்று முன்­தி­னம் 1,229 பேருக்கு தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது. மேலும் 13 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அங்கு சில பகு­தி­களில் மட்­டும் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

ஆந்­தி­ரா­வில் மேலும் 1,321 பேருக்கு தொற்று உறு­தி­யா­னது. புதி­தாக 9 பேரை காவு வாங்­கி­யுள்ள

கொரோனா பாதிப்­புக்கு அம்­மா­நி­லத்­தில் இப்­போது 14,853 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்­றி­யுள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் ஆறு பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 213,122 ஆக உயர்ந்­துள்­ளது. பலி­யா­னோர் எண்­ணிக்கை 3,575 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.