பஞ்சாப்: கையெறி குண்டுகளுடன் ஆடவர் கைது

பஞ்சாப்: கையெறி குண்டுகளுடன் ஆடவர் கைது

2 mins read
33a46864-d480-4e55-b012-0655689ea6cf
-

லூதி­யானா: வெளி­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­பு­டைய ஆட­வரை பஞ்­சாப் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அவ­ரி­டம் இருந்து கையெறி குண்­டு­கள் இரண்டு பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அவை சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பஞ்­சாப் மாநி­லம் தர்ன் தரன் பகு­தி­யில் உள்ள கிரா­மம் ஒன்­றில் சரூப் சிங் என்ற அந்த ஆட­வர் வசித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், அவ­ரைப் பற்றி கிடைத்த ரக­சிய தக­வ­லின் அடிப்­ப­டை­யில் போலி­சார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

இதை­ய­டுத்து, அவ­ரி­டம் தீவிர விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அப்­போது அவ­ருக்கு வெளி­நாட்­டில் இயங்கி வரும் பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்பு இருப்­பது தெரிய வந்­தது.

அவர் வைத்­தி­ருந்த கையெ­றிக் குண்­டு­கள் சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்ட பி-86 வகை­யைச் சேர்ந்­தவை என்­றும் அவை சக்தி வாய்ந்­தவை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்ட சரூப் சிங் சதி வேலை­க­ளுக்கு திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

அவ­ரி­டம் தொடர்ந்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பஞ்­சாப் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் நாச வேலை­களில் ஈடு­பட அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தி­ருக்­க­லாம் என்­றும் அந்த சதித்­திட்­டங்­கள் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பஞ்­சாப் காவல்­துறை தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, சரூப் சிங் தொடர்பு வைத்­தி­ருந்த வெளி­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் அவ­ரு­டன் சம்­பந்­தப்­பட்ட வேறு யாருக்­கே­னும் தொடர்பு உள்­ளதா என போலி­சார் தீவிர விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

சரூப் சிங்­கின் கைது நட­வ­டிக்­கை­யால் அவர் வசித்து வந்த பகு­தி­யில் பர­ப­ரப்பு நிலவி வரு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.