ராஜ்நாத் சிங்: எத்தகைய சூழலையும் சமாளிக்க இயலும்

ராஜ்நாத் சிங்: எத்தகைய சூழலையும் சமாளிக்க இயலும்

2 mins read
b47d93d7-7d10-4f1e-91ab-9fc0eb4f8090
ராஜ்நாத் சிங். படம்: ஊடகம் -

'ஆப்கானிஸ்தான் நிலையை இந்திய அரசு உன்னிப்பாகக் கவனிக்கிறது'

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் நில­வும் சூழ­லைப் பயன்­ப­டுத்தி, எல்லை கடந்த பயங்­க­ர­வா­தத்தை ஊக்­கு­விக்க முயற்சி செய்­யும் எந்­த­வொரு தேச விரோத சக்­தி­யை­யும் அனு­ம­திக்­கக்­கூ­டாது என மத்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

எத்­த­கைய சூழ்­நி­லை­யை­யும் சமா­ளிக்க இந்­தியா தயா­ராக உள்­ளது என்று நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

கடல், தரை­வழி, வான்­வழி பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் சீனா உட­னான எல்­லைப் பிரச்­சி­னைக்கு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காண்­பதே இந்­தி­யா­வின் விருப்­பம் என்­றும் அவர் கூறி­னார்.

"நாட்­டின் எல்­லை­கள் தொடர்­பான அம்­சங்­களில் எந்­த­வொரு சம­ச­ரத்­துக்­கும் இட­மில்லை என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ராஜ்­நாத் சிங், நாட்டின் இறையாண்மை மீறப்­ப­டு­வதை ஒரு­போ­தும் அனு­ம­திக்க இய­லாது என்­றார்.

இரண்டு முறை நடை­பெற்ற போர்­களில் இந்­தி­யா­வால் பாகிஸ்­தான் தோற்­க­டிக்­கப்­பட்­டதை நினை­வு­ப­டுத்­திய அவர், இந்­தியாவை போர் மூலம் எதிர்­கொள்ள முடி­யாது என்­ப­தால் பாகிஸ்­தான் தரப்பு மறை­முக போரில் ஈடு­ப­டு­வ­தா­கக் குற்­றம்­சாட்­டி­னார்.

பாகிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு எதி­ரான சதித்­திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் அனைத்து சதி­க­ளை­யும் இந்­திய ராணு­வம் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் ராஜ்­நாத் சிங் குறிப்­பிட்­டார்.

"ஆப்­கா­னிஸ்­தா­னின் தற் போதைய நிலை­யால் இந்­தி­யா­வுக்கு பாது­காப்புப் பிரச்­சி­னை­கள் எழுந்­தி­ருப்­பது உண்­மை­தான். எனினும் மத்­திய அரசு அங்­குள்ள நிலைமையை மிக­வும் உன்­னிப்­பாகக் கண்­கா­ணித்து வரு­கிறது. மேலும், பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வு­ட­னான கலா­சா­ரம், பொரு­ளா­தா­ரம், அர­சி­யல், வர்த்­த­கம் சார்ந்த உறவு­களை முன்­பு­போல் தொடர விரும்­பு­வ­தாக தலி­பான் அமைப்­பின் துணைத் தலை­வ­ரான ஷேர் முக­மது அப்­பாஸ் ஸ்டே­னக்­சாய் கூறி­யுள்­ளார்.

கத்­தா­ரில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், ஆப்­கா­னைப் பொறுத்த­வரை இந்­தியா மிக முக்­கி­ய­மான நாடு என்­றார்.

பாகிஸ்­தான் வழி­யாகவோ அல்­லது நேரடி விமா­னப் போக்கு­வ­ரத்து வாயி­லா­கவோ இரு தரப்­பும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இய­லும் என அவர் தெரி­வித்­தார்.

இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'துருவ் மார்க்' வகையைச் சேர்ந்த அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பிடம் இருந்து வாங்குகிறது மத்திய அரசு.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடியாகும்.