போலிஸ் தடியடியில் விவசாயி உயிரிழப்பு: ஹரியானாவில் பதற்றம்

போலிஸ் தடியடியில் விவசாயி உயிரிழப்பு: ஹரியானாவில் பதற்றம்

2 mins read
9ead7809-dd83-470e-828f-947cc3da8adc
-

சண்டிகர்: ஹரி­யா­னா­வில் விவ­சாயி­க­ளின் போராட்­டம் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. அங்கு போராட்­டத்­தில் பங்­கேற்ற விவ­சா­யி­கள் மீது போலி­சார் நடத்­திய தடி­ய­டி­யின்­போது ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

இது தொடர்­பாக நீதி விசா­ரணை நடத்த வேண்­டும் என விவ­சாய சங்­கங்­கள் வலி­யு­றுத்தி உள்­ளன. அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

மத்­திய அரசு கொண்டு வந்­துள்ள புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து தலை­ந­கர் டெல்­லி­யில் கடந்த பல மாதங்­க­ளாக விவ­சாயி­கள் பல்­வேறு போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். இப்­போது மாநில அள­வி­லும் போராட்­டங்­கள் நடக்­கின்­றன.

இந்­நி­லை­யில், ஹரி­யா­னா­வில் கடந்த சனிக்­கி­ழமை நடந்த போராட்­டத்­தின்­போது, போலி­சார் விவ­சாயி­கள் மீது திடீர் தடி­யடி நடத்­தினர். அப்­போது படு­கா­ய­ம­டைந்த விவ­சாயி ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

காவல்­து­றை­யின் இந்­தச் செயல்­பாட்­டைக் கண்­டித்து ஞாயிற்­றுக்­கி­ழமை கர்­னல் என்ற பகு­தி­யில் ஏரா­ள­மான விவ­சா­யி­கள் ஒன்­று­கூடி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது போலிஸ் மேற்கொண்ட தடி­ய­டி­யின்­போது விவ­சாயி ஒரு­வர் இறந்­தது குறித்து நீதி விசா­ர­ணைக்கு மாநில அரசு உத்­த­ர­விட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இல்­லை­யெ­னில் செப்டம்­பர் 6ஆம் தேதி தலை­மைச் செய­ல­கத்தை முற்­று­கை­யி­டப் போவ­தாக விவ­சாய சங்­கங்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­னன.

இதற்­கி­டையே, சட்­டம் ஒழுங்கை காப்­பாற்ற வேண்­டிய கடமை அர­சுக்கு உள்­ளது என்­றும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே சில நட­வ­டிக்கை­களை மேற்­கொள்ள வேண்டி­யுள்­ளது என்­றும் ஹரி­யானா முதல்­வர் மனோ­கர் லால் கட்­டார் கூறி­யுள்­ளார்.

"போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள விவசாயிகளின் மண்­டையை உடைக்க வேண்­டும் என அதி­காரி ஒரு­வர் உத்­த­ர­விட்­டது தவ­று­தான். எனி­னும் சட்­டம், ஒழுங்கை காப்­பாற்று­வது அர­சின் கடமை என்­பதை அனைவரும் உணரவேண்­டும்," என முதல்­வர் மனோ­கர் லால் கட்­டார் மேலும் தெரி­வித்­துள்­ளார்.