பால்கர்: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகையைச் சேர்ந்த 'கடல் தங்கம்' என்று அழைக்கப் படும் விலை உயர்ந்த கோல் (ghol) மீன்கள் சிக்கியதால், அவர் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரராகி உள்ளார்.
பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் தாரே என்பவருக்குத் தான் இந்த கோல் மீன்களின் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
சக மீனவர்கள் எட்டுப் பேருடன் வாத்வான் என்ற பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார் சந்திரகாந்த் தாரே.
அப்போது, அவர் விரித்த வலையில் மீன்கள் சிக்கியதை அடுத்து, அதை படகுக்குள் இழுத்துப் பார்த்த ேபாது இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் பத்து, இருபது மீன்கள் மட்டுமல்ல; 157 கோல் மீன்கள் சந்திரகாந்த் விரித்த வலையில் சிக்கியிருந்தன.
மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை மீன்களுக்கு ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக கிராக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால், அவற்றின் விலையும் மிக அதிகமாக உள்ளது.
'தங்க இதய மீன்' என மீனவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் சந் திரகாந்த்துடன் வந்த இதர மீனவர்களும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயினர்.
இந்த தகவலறிந்த தனியார் நிறுவனங்கள் மீன்களை ஏலம் எடுக்க போட்டிபோட்டன.
உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒரு கோடியே 33 லட்ச ரூபாய்க்கு கோல் மீன்களை ஏலம் எடுத்தன.
இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் இந்த மீன், ஒரு கிலோ 5,000 ரூபாய் வரை விற்கப்படுவதா கவும் தகவல்கள் கூறியுள்ளன.

