ஜக்தல்பூர்: சட்டீஷ்கர் மாநிலத்தின் பாஜக பொதுச் செயலாள ரான டி புரந்தேஸ்வரி என்பவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து அந்த மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
தன்னுடைய கட்சித் தொண்டர்கள் எச்சில் துப்பினால் அந்த எச்சிலில் முதல்வர் புபேஷ் பாகலும் அவருடைய அமைச்சரவையும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று புரந்தேஸ்வரி கூறினார்.
வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை அரியணை ஏற்ற வேண்டும் என்றும் அதற்குப் பாடு படுமாறும் கட்சித் தொண்டர்களை வலியுறுத்தியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் ஆளும் கட்சிக்குத் தேர்தலில் சரியான அடி கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாது தொண்டர் களிடையே தெரிவித்தது காணொளியாகவும் வெளி யானது. இதைக் கேட்டு கடும் கோபமடைந்த ஆளும் தரப்பினர், பதிலடி கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினர்.
"யாராவது ஆகாயத்தில் எச்சில் துப்பினால் அது துப்பியவர் மீதுதான் வந்து விழும்," என்று முதல்வர் புபேஷ் காரசாரமாகத் தெரிவித்தார்.
"பாஜக பொதுச் செயலாளர் இப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர், காங்கிரசில் இருந்தபோது நன்றாகத்தான் இருந்தார்.
"பாஜகவில் சேர்ந்ததும் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்," என்று செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

