தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்துக்கு உலகில் இடமில்லை: அமீரகம், இந்தியா திட்டவட்டம்

1 mins read
945c287f-e850-438b-bb7b-ea1bbb4037e9
-

புது­டெல்லி: அபு­தாபி பட்­டத்து இள­வ­ர­சர் ஷேக் முக­மது பின் ஜாயத் அல் நஹ்­யா­னு­டன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்தை பய­னுள்­ள­தாக அமைந்­தது என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

அப்­போது பயங்­க­ர­வா­தத்­துக்­கும் பிரி­வி­னை­வா­தத்­துக்­கும் உல­கில் இட­மில்லை என்­ப­தை இரு­த­ரப்­பும் ஒத்­துக்­கொண்­ட­தாக டுவிட்­டர் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத்­த­கைய சக்­தி­க­ளுக்கு எதி­ராக அனைத்­து­லக சமூ­கம் ஒன்­றி­ணைந்து நிற்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை இரு­த­ரப்­பும் வலி­யு­றுத்­து­வ­தா­க­வும் அமீ­ர­கத்­தில் வாழும் இந்­தி­யர்­க­ளுக்கு கொரோனா காலத்­தில் அந்­நாடு வழங்­கிய உத­வி­கள் மிகுந்த பாராட்­டுக்­கு­ரி­யது என்­றும் பிர­த­மர் மோடி தமது பதிவில் கூறி­யுள்­ளார்.

"வட்­டார அள­வி­லான முன்­னேற்­றங்­கள் குறித்து இரு­த­ரப்­பி­லும் விவா­திக்­கப்­பட்­டது.

"துபா­யில் நடை­பெற உள்ள கண்­காட்­சிக்கு எனது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­தேன்," என்­றும் பிர­த­மர் மோடி தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரு­வ­ரும் தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு பேசி­ய­தா­க­வும் வட்­டார அள­வி­லான பொதுப்­பி­ரச்­சி­னை­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­ட­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.