2வது தடுப்பூசிக்கான கால இடைவெளியை 4 வாரங்களாக குறைக்க நீதிமன்றம் பரிந்துரை

2 mins read
9022434e-7958-44ba-af73-30c3c2225970
அவசரமாக தடுப்பூசிப் போட்டுக் கொள்ள மும்பையில் உள்ள தற்காலிக தடுப்பூசி முகாமில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். படம்: ஏஎஃப்பி -

திருவனந்தபுரம்: ஆஸ்ட்­ரா­ஸெ­னகா கொவிட்-19 தடுப்­பூ­சி­யின் இந்­திய தயா­ரிப்­பான கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சியை இரண்­டாம் முறை செலுத்­து­வ­தற்­கான கால அவ­கா­சம் நான்கு வாரங்­க­ளா­கக் குறைக்­கப்­பட வேண்­டும் என கேரள உயர் நீதி­மன்­றம் மத்­திய சுகா­தார அமைச்­சி­டம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து அம்­மா­நில உயா் நீதி­மன்ற நீதி­பதி பி.பி. சுரேஷ் குமாா் கூறு­கை­யில், "கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­யின் முதல் மற்­றும் இரண்­டாம் தவ­ணை­க­ளுக்­கான கால இடை­வெளி 84 நாள்­க­ளாக உள்­ளது. ஆனால், வெளி­நாடு செல்ல விரும்­புவோா் முன்­ன­தா­கவே இரண்­டா­வது தவ­ணையை எடுத்­துக் கொள்ள மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

"வெளி­நாடு செல்­லும் அனை­வ­ரும் அங்­கேயே நிரந்­த­ர­மாக குடி­யே­று­ப­வா்­கள் அல்­லர். வேலை முடிந்­த­வு­டன் பெரும்­பா­லானோா் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பி­வி­டுவா்.

"இந்த நிலை­யில், உள்­நாட்­டில் வேலை­வாய்ப்பு மற்­றும் கல்வி தொடா்பான கார­ணங்­க­ளி­னால் இரண்­டா­வது தவணை தடுப்­பூ­சியை முன்­கூட்­டியே போட்­டுக்கொள்ள விரும்­பு­வோ­ருக்கு அதே சலு­கையை நீட்­டிக்க முடி­யாது என்று சொல்­வ­தற்கு எந்த அடிப்­ப­டை­யான கார­ணங்­களும் இல்லை.

"எனவே, இரண்­டா­வது தடுப்­பூ­சியை முன்­கூட்டி போட்­டுக்­கொள்ள விரும்­புவோா் 4 வாரங்­க­ளுக்­குப் பிறகு அதனை எடுத்­துக் கொள்ள மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

"அதற்குத் தகுந்­தாற்­போல் 'கோவின்' வலைத்­த­ளத்­தில் கால அட்­ட­வ­ணை­யில் மாற்­றங்­களை மேற்­கொள்ள மத்­திய அரசு அனு­ம­தி­ய­ளிக்க வேண்­டும்," என்­றார் அவா்.

3வது முறை ஒரே நாளில் 10 மி. தடுப்­பூசி

திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 10 மில்லியன் (1.13 கோடி) பேருக்கு தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை நேற்று கூறி­யது. அன்­றைய தினம் 1,13,53,571 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­ட­தன் மூலம் கடந்த 11 நாள்­களில் மூன்­றா­வது முறை­யாக ஒரே நாளில் பத்து மில்லியன் பேருக்கு மேல் தடுப்­பூசி செலுத்­தப்­பட்ட சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது.