லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் டெங்கி காய்ச்சல் பரவி வருகிறது. ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 51 போ் மாண்டுவிட்டனா்.
இந்நிலையில், டெங்கி அதிகம் பரவும் பகுதிகளிலுள்ள குளங்களில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்கள் விடப்பட்டு வருகின்றன. அனைத்து நீர் நிலைகளிலும், சுமார் 25,000 மீன்கள் வீதம் விடப்படுன்றன.
இதன் மூலம், குளங்களிலுள்ள குப்பை மற்றும் அல்லி இலைகளில் முட்டையிட்டு உற்பத்தியாகும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் டெங்கிப் பரவல் கட்டுப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

