திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் நிஃபா கிருமித்தொற்று தனிமைப்படுத்தல் பிரிவில் 68 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் நலமுடன் உள்ளனர். புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் யாருக்கும் தொற்றில்லை என தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை
10 பேருக்குத் தொற்றில்லை
எனத் தெரியவந்தது," என்றார்.