நம்பத்தகுந்த செய்திகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்கள் முதன்மை: ஆய்வில் தகவல்

நம்பத்தகுந்த செய்திகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்கள் முதன்மை: ஆய்வில் தகவல்

1 mins read
a57a61b0-6978-4bf1-975d-9a9748535ef4
-

புது­டெல்லி: நம்­பத்­த­குந்த செய்­தி­களை வெளி­யி­டு­வ­தில் அச்சு ஊட­கங்­கள் முன்­னிலை வகிப்­ப­தா­க­வும் செய்­தித்­தாள்­களில் வெளி­யா­கும் விளம்­ப­ரங்­க­ளுக்கு அதிக பலன் இருப்­ப­தா­க­வும் கருத்­துக்­க­ணிப்பு ஒன்­றில் தெரிய வந்­துள்­ளது.

'ஹவாஸ் மீடியா குரூப் இந்­தியா' என்ற நிறு­வ­னம் அண்­மை­யில் அந்­தக் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­யது. பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் திரட்­டப்­பட்ட கருத்­து­கள் அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டன.

"கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் காலத்­தில் இருந்து வாச­கர்­கள் செய்­தித்­தாள் படிக்­கும் நேரம் அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, 41-50 வயது வரை­யி­லான வாச­கர்­கள் அதிக நேரம் நாளி­தழ்­களை வாசிக்­கின்­ற­னர்.

"நாளி­தழ்­கள் மீதான வாச­கர்­க­ளின் எதிர்­பார்ப்பு கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது. செய்­தி­க­ளைத் தெரிந்து கொள்­வ­தற்­காக மட்­டும் நாளி­தழ்­களை வாசிப்­பது என்ற நிலை மாறி அறிவை வளர்த்­துக்­கொள்­வது, நாட்டு நடப்­பு­க­ளைத் தெரிந்­து­கொள்­வது, மொழிப் புல­மையை வளர்த்­துக்­கொள்­வது போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் நாளி­தழ்­களைப் படிக்­கும் பழக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.

"பொது­வான செய்­தி­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக அறி­வி­யல்-தொழில்­நுட்­பம், அனைத்­து­லக விவ­கா­ரங்­கள், சுகா­தா­ரம் போன்­றவை குறித்த செய்­தி­கள் அதி­கம் வாசிக்­கப்­ப­டு­கின்­றன.

"அச்சு ஊட­கங்­கள் வாயி­லாக மட்­டுமே நம்­பத்­த­குந்த செய்­தி­களை தெரிந்­து­கொள்ள முடி­யும் என்­ப­தில் மக்­கள் உறு­தி­யாக உள்­ள­னர். அதே­போல அச்சு ஊட­கங்­களில் வெளி­யா­கும் விளம்­ப­ரங்­கள் வாச­கர்­கள் மத்­தி­யில் மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

"குறிப்­பிட்ட 'பிராண்ட்' மீதான நம்­ப­கத்­தன்மை, விலை மற்­றும் நம்­பிக்கை ஆகி­யவை அச்சு விளம்­ப­ரங்­களில் பல­ம­டங்கு அதி­க­மாக உள்­ளன. வெறும் 10% வாச­கர்­கள் மட்­டுமே விளம்­ப­ரங்­க­ளைத் தவிர்க்­கின்­ற­னர்," என அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.