சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நோய்த் தொற்று பரவலை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது. அதனால் மக்களை தடுப்பூசி போடுமாறு ஊக்குவிக்க பல்வேறு உத்திகள் கையாளப் படுகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"முதல் தவணை தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்.
"மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது," என தெரி விக்கப்பட்டுள்ளது.

