புதுடெல்லி: அன்றாட கொவிட்-19 கிருமித்தொற்று குறித்து மத்திய சுகாதாரத் துறை நேற்றுக் காலை அறிக்கை வெளியிட்டது. அதில், "நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,32,08,330 ஆக உயா்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 308 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4,42,317ஆக அதிகரித்துள்ளது.
"32,198 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,23,74,497 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,91,516ஆக உள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளாவில் அன்றாட பாதிப்பும் இறப்பும் தொடா்ந்து அதிகமாகவே உள்ளது. 24 மணி நேரத்தில் 25,010 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 177 பேர் உயிரிழந்துவிட்டனர்.

