பாலியல் சித்திரவதையில் பெண் மரணம்: மற்றொரு 'நிர்பயா' கொடூரம்; ஆடவர் கைது

2 mins read
bbc1a0b0-83d9-403a-bb3e-c3efd0bcf92f
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் மும்பை அருகே சகி­னகா புற­ந­கர் பகு­தி­யில் 34 வயது மதிக்­கத்­தக்க பெண் ஒரு­வர் டெம்போ வாக­னத்­திற்­குள் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கடு­மை­யாகத் தாக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆபத்­தான நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அந்­தப் பெண் நேற்று உயி­ரி­ழந்­த தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெள்­ளிக்­கி­ழமை அதி­கா­லை­யில் கொடூ­ரத்­த­ன­ம் புரிந்த ஆட­வ­ரின் பெயர் மோகன் சௌகான் என அடை­யா­ளம் காணப்­பட்­டது.

சம்­ப­வம் நடந்த சில மணி நேரங்­க­ளி­லேயே மோகன் செள­கான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தரப்பு தக­வல் வெளி­யிட்­டுள்­ளது. இது­கு­றித்து காவல்­துறை அலு­வ­லர் ஒரு­வர் கூறு­கை­யில், "வெள்­ளிக்­கி­ழமை காலை, சாலை ஓரம் பெண்ணை ஆண் ஒரு­வர் தாக்­கு­வ­தா­கக் கட்­டுப்­பாட்டு அறைக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

"இதை­ய­டுத்து, சம்­ப­வ இடத் திற்குச் சென்­ற­போது ரத்த வெள்­ளத்­தில் பெண் ஒரு­வர் கிடந்­தார். அந்தப் பெண்ணை ராஜ­வாதி அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் சென்­றோம். முதற்­கட்ட விசா­ர­ணை­யில், பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்டு இரும்புத் தடி­யால் பிறப்­பு­றுப்பு உள்­ளிட்ட பாகங்­களில் தாக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

சாலை அருகே நின்­று­கொண்­டி­ருந்த டெம்போ வாக­னத்­திற்­குள் இச்­சம்­ப­வம் நடந்­துள்­ளது. வாக­னம் முழு­வ­தும் ரத்த கறை படிந்­தி­ருந்­தது," என்­றார்.

கொலை, பாலி­யல் வன்­பு­ணர்வு என பல்­வேறு பிரி­வு­க­ளின்­கீழ் குற்ற வாளி மீது வழக்­குப்பதிவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டு ­வ­ரு­கிறது. 2012ஆம் ஆண்டு டெல்­லி­யில் ஓடும் பேருந்­தில் நடை­பெற்­ற­தைப் போல இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வ­மும் நிகழ்ந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.