செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7bfe43fc-c9ff-49be-9997-3b41d8e0f1cf
-

வாய்க்குள் சுமார் 1 கிலோ தங்கம்

புதுடெல்லி: துபாயிலிருந்து டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு ஆடவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அந்த ஆடவர்கள் இருவரும் தங்களது வாய்க்குள் பற்களோடு சேர்த்து ஒட்டி 951 கிராம் தங்கத்தையும் தங்கச் சங்கிலி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலிசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகளுக்கு வாய்ப்பில்லை

லக்னோ: புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மாஃபியா கும்பல் தலைவர் முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் பஞ்சாப் மாநிலம் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அக்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2022 தொடக்கத் தில் நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்த லில், குற்றப்பின்னணி கொண்ட யாரும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப் படமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்றவருக்கு கௌரவம்

புவ­னேஸ்­வர்: ஒடிசா மாநி­லத்­தைச் சேர்ந்த பேட்­மிண்­டன் வீரர் பிர­மோத் பகத், தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற பாரா­லிம்­பிக்ஸ் போட்­டி­யில் தங்­கம் வென்று அசத்­தி­னார். போட்­டி­கள் நிறை­வுற்ற நிலை­யில் வெள்­ளிக்­கி­ழமை சொந்த ஊர் திரும்­பிய பிர­மோத் பகத்­திற்கு புவ­னேஸ்­வர் விமான நிலை­யத்­தில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. மேலும் அவ­ருக்கு மாநில அர­சின் சார்­பில் ரூ.6 கோடி வெகு­மதி அளிக்­கப்­படும் என மாநில முதல்­வர் நவீன் பட்­நா­யக் அறி­வித்­துள்­ளார். மாநில அர­சில் அதி­காரி அந்­தஸ்­தில் பகத்­துக்கு வேலை­யும் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொண்டாட்டத்தில் கொரோனா

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொடர் கொண்டாட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் தடுப்பூசி பிரசாரம் இணைக்கப்பட்டிருந்தது. இதேபோல தடுப்பூசி பிரசாரத்துடன் கூடிய விநாயகர் சிலைகள் பல நகரங்களில் வைக்கப்பட்டிருந்தன. (படம்: ஏஎஃப்பி)