மோடி: இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது

மோடி: இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது

2 mins read
f9a4297a-9243-4532-8d39-725902f9c629
நரேந்திர மோடி. : ஊடகம் -

புது­டெல்லி: 21ஆம் நூற்­றாண்­டில் இந்­தியா மிக­வும் வளர்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தார நாடாக அனைத்­துலக அரங்­கில் திகழ்­கிறது என பிர­த­மர் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா பாதிப்­பில் இருந்து இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் மீண்டு வரு­வ­தா­க­வும் இந்த மீட்­சி­யா­னது வலு­வாக இருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத்­தில் சர்­தார்­தாம் பவன் அரங்கை காணொளி நிகழ்­வின் வழி திறந்து வைத்­துப் பேசிய அவர், புதிய வேலை வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு அந்த அரங்­கில் பயிற்சி வகுப்­பு­கள் நடத்­தப்­படும் என்­றார்.

இந்­தி­யா­வின் தேசிய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம் அண்­மை­யில் நாடு தழு­விய அள­வில் ஆய்வு ஒன்றை மேற்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, இதன் மூலம் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில் 20.1 விழுக்­காடு அதி­க­ரித்து இருப்­பது தெரியவந்­துள்­ளது என்­றார்.

இது முந்­தைய ஆண்டு இதே காலத்­தில் எட்­டப்­பட்ட வளர்ச்­சியை விட அதி­கம் என்­றும் கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­தில் நாட்­டின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 'மைனஸ்' 24.4 விழுக்­கா­டாக இருந்­தது என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஒட்­டு­மொத்த உலக நாடு­க­ளின் பொரு­ளா­தா­ர­மும் கடும் பாதிப்­பு­களை எதிர்­கொண்ட வேளை­யி­லும், இந்­தி­யா­வில் மட்­டும் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பிர­த­மர் மோடி கூறி­னார்.

"இந்­தி­யா­வில் மட்­டும்­தான் உற்­பத்தி சார்ந்த ஊக்­கச் சலுகை அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. இது பல புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தந்­தது. உற்­பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை பத்து துறை­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஜவுளி, வாக­னம் உள்­ளிட்ட தொழில்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தொற்­றுப் பர­வல் பாதிப்­பிற்­குப் பிறகு இத்­து­றை­கள் குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை எட்டியுள்­ளன," என்றார் பிர­த­மர் மோடி.

ஏனைய உலக நாடு­க­ளைப் போலவே இந்­தியப் பொரு­ளா­தா­ர­மும் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது என்று குறிப்­பிட்ட அவர், சேதங்­க­ளைக் காட்­டி­லும் நாடு வேக­மாக மீண்­டுள்­ளது என்­றார்.பெருந்­தொற்று மேலாண்மை தொடர்­பி­லான அனு­ப­வங்­கள், தடுப்­பூசி நட­வ­டிக்­கையை விரி­வு­ப­டுத்­து­தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் மூன்­றா­வது அலை ஏற்­பட்­டா­லும் பொரு­ளியல் மீட்சி தொட­ரும் என்ற நம்­பிக்கை உள்­ளது என்றார் மோடி.

'கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன'