12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஊசி இல்லா தடுப்பு மருந்து

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஊசி இல்லா தடுப்பு மருந்து

1 mins read
74f93a6c-57ab-477e-8856-831ae02963e8
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் உள்ள 12 முதல் 18 வய­துக்­குட்­பட்ட குழந்தை­கள், பதின்ம வய­தி­ன­ருக்கு அக்­டோ­பர் முதல் தடுப்­பூசி போடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சைடஸ் கெடிலா நிறு­வ­னம் இந்­தப் பிரி­வி­ன­ருக்­கான ஊசி­யில்லா மருந்தை உற்­பத்தி செய்­துள்­ளது.

'ஸைகோவ்-டி' என்று குறிப்­பிடப்­படும் இந்த மருந்து மூன்று தவணை­க­ளா­கப் போடப்­பட வேண்­டும். மேலும், இதை உட­லுக்­குள் செலுத்த ஊசி தேவை­யில்லை.

முதல் தவ­ணைக்­குப் பிறகு 28 நாள்­களில் இரண்­டா­வது, 56ஆவது நாளில் மூன்­றா­வது தவ­ணை­யாக இந்த மருந்து உட­லில் செலுத்­தப்­படும். நமது உட­லின் தோல் பகு­தி­யில் ஹைப்­போ­டெர்­மிக் எனப்­படும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இந்த மருந்து செலுத்­தப்­ப­டு­கிறது.

அவ­ச­ர­கால பயன்­பாட்­டுக்கு 'ஸைகோவ்-டி' மருந்தைப் பயன்­படுத்த கடந்த மாதம் 20ஆம் தேதி இந்­திய மருந்து ஒழுங்­கு­முறை ஆணை­யம் அனு­மதி அளித்­தி­ருந்­தது. கொரோ­னா­வுக்கு எதி­ரான உல­கின் முதல் பிளாஸ்மா-மர­பணு மருந்து 'ஸைகோவ்-டி' தான்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய, சைடஸ் கெடிலா நிறு­வ­னத்­தின் மேலாண்மை இயக்­கு­நர் ஷர்­வில் படேல், இம்­மா­தமே மருந்து விநியோ­கம் தொடங்­கி­வி­டும் என்­றும் முதற்­கட்­ட­மாக மாதந்­தோ­றும் நூறு மில்­லி­யன் 'ஸைகோவ்-டி' மருந்­து­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

பின்­னர் இந்த எண்­ணிக்­கையை மாதந்­தோ­றும் ஐநூறு மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளதாக சைடஸ் கெடிலா நிறு­வ­னம் கூறியுள்ளது.