புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தி தலைமையில் எதிர்கொள்ளும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
"பிரியங்கா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும். கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.
"ஒருவேளை யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அவர் பின்னர் அறிவிக்கக்கூடும்," என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கும் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள், பெண்களின் நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.