புதுடெல்லி: திகார் சிறையில் கைதிகள் இடையே திடீர் மோதல் வெடித்ததால் பதற்றம் நிலவியது. இதில் சில கைதிகள் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் சிறையின் மூன்றாவது பிரிவில் வெடித்த இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை.
படுகாயமடைந்த கைதிகள் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இருவரும் சிறைக்கு திரும்பிவிட்டதாக போலிஸ் தரப்பு தெரிவித்தது.

