புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 10% பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த சொத்தில் பாதி (50%) சொத்துகள் இருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பிலான புள்ளிவிவர அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் 55.7% சொத்து 10% பணக்காரர்களிடம் உள்ளன. அவர்கள் வசம் கிராமப் பகுதிகளில் உள்ள சொத்து 50.8% என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மிகவும் கீழ்நிலையில் உள்ள ஏழைகளிடம் இருக்கும் சொத்துகளின் அளவு ஒட்டுமொத்த சொத்தில் 5% கூடஇல்லை.
நிலம், வாகனங்கள், கட்டடங்கள், இயந்திரங்கள், விவசாய சாதனங்கள், கால்நடைகள், பங்குச்சந்தை முதலீடுகள், வங்கி முதலீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு சொத்துப்பட்டியலை உருவாக்கி உள்ளது.
கிராமப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்தில் ரூ.132.5 லட்சம் கோடி சொத்து 10% பணக்காரர்களிடம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
டெல்லி நகரப் பகுதிகளில் 67.9% சொத்து 10% பணக்காரர் களிடம் உள்ளன. 50% ஏழைகளிடம் 3.5% சொத்து மட்டுமே உள்ள தாக அறிக்கை கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் நகர்ப்புற பகுதிகளில் 10% பணக்காரர்களிடம் 61.4% சொத்து உள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 50% ஏழைகளிடம் இருக்கும் சொத்து 5%தான் என்று கூறப்பட்டுள்ளது.

