புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபு ணர்கள் கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தயாரிப்பு கொவிட்-19 தடுப்பூசியான கோவேக்சின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து
இக்கூட்டத்தில் முடிவெடுக்கப் படும் என தகவல்கள் தெரி விக்கின்றன. ஹைதராபாத்தில் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் அனு மதிக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் உலக சுகாதார நிறுவனத்திடம் ஏற்கெனவே அளித்துள்ளது.