புதுடெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு நான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் அதி
கரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் 35,662 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. தொற்று காரணமாக 281 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்
களையும் சேர்த்து மரண எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் நான்கு நாள்
களுக்குப் பிறகு நேற்று மீண்டும் அதிகரித்தது. செவ்வாய் (25,404), புதன் (27,176), வியாழன் (30,570), (வெள்ளி 34,430) என சிறிய அளவிலான ஏற்ற, இறக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று 35,662 என கூடிவிட்டது. இதில் கேரள தொற்று மட்டும் 65.22 விழுக்காடு. அங்கு 24 மணி நேரத்தில் 23,260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கடுத்து மகாராஷ்டிரா (3,586), தமிழ்நாடு (1,669), மிசோரம் (1,476), ஆந்திரா (1,393) என தொற்று எண்ணிக்கை பதிவானது. 24 மணி நேர மரண எண்ணிக்கையிலும் கேரளாவே உச்சத்தில் உள்ளது. அங்கு 131 மரணங்களும் அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 67 மரணங்களும் பதிவாயின.

