கடவுளின் மறுஅவதாரம் மோடி: அமைச்சர்
புதுடெல்லி: கடவுளின் மறுஅவதாரமாக பிரதமா் மோடி திகழ்கிறாா் என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான பஷுபாட்டி குமாா் பாரஸ், 68, கூறியுள்ளாா். மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை லோக் ஜனசக்தி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்
களிடம் அவா் இவ்வாறு கூறினார்.
"யாரும் கடவுளைப் பாா்க்க முடியாது. ஆனால், பிரதமரைப் பாா்க்க முடிகிறது. நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் அவா், எனது பாா்வையில் கடவுளாகத் தோன்றுகிறார்," என்றார் பஷுபாட்டி.
புதுடெல்லி: 2020 மார்ச் முதல் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த எல். முருகன், 44, கடந்த ஜூலை மாதம் மத்திய இணை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
அதன் பின்னர் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டதால் ஆறு மாதங்களுக்குள் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி.
இந்நிலையில், பல மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற மேலவை (மாநிலங்களவை) உறுப்பினர் இடங்
களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை நேற்று அறிவித்தது. மத்திய பிரதேசம் மாநிலம் சார்பாக போட்டியிட எல். முருகன் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர் எளிதில் வெற்றிபெறும் நிலை உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக தலைவர் இல.கணேசன் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

