புதுடெல்லி: சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் சவூத், மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு சனிக்கிழமை இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் இந்தியப் பிரதமர், அமைச்சர்களுடன் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சு நடத்துவார் என்றும் ஆப்கானிஸ்தான் பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
வெளியார் தலையீடு இல்லாமல் தங்கள் எதிர் காலத்தை ஆப்கான் மக்கள் நிர்ணயித்துக்கொள்ள சவூதி உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.