தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்

2 mins read
9d718b2d-78d4-4e2e-aa1b-1f1da974c211
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள். படம்: ஊடகம் -

அக­ம­தா­பாத்: ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து கப்­பல் மூலம் கடத்தி வரப்­பட்ட ஏறத்தாழ 21 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள போதைப்­பொ­ருள் குஜ­ராத் துறை­மு­கத்­தில் சிக்­கி­யது.

மொத்­தம் மூவா­யி­ரம் கிலோ போதைப்­பொ­ருள்­ கடத்தி வரப்­பட்­ட­தா­க­வும் இந்­தி­யா­வில் ஒரே சம­யத்­தில் இந்த அளவு போதைப்­பொ­ருள் பிடி­பட்­ட­தில்லை என்றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து ஈரான் துறை­மு­கம் வழி­யாக இந்­தப் போதைப்­பொ­ருள் குஜ­ராத் மாநிலத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. கப்­ப­லின் இரு கொள்­க­லன்­க­ளுக்­குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அந்த ஹெரா­யின் போதைப்­பொ­ருள் ஆந்­தி­ரா­வில் உள்ள நிறு­வ­னத்­திற்கு அனுப்­பப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்டி­ருந்­தது.

கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ரு­ளின் அனைத்­து­ல­கச் சந்தை மதிப்பு சுமார் மூவா­யி­ரம் கோடி ரூபாய் என்­றும் இந்த வகை ஹெரா­யின் ஆப்­கா­னிஸ்­தா­னில்­தான் அதிக அள­வில் கிடைக்­கும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இது தொடர்­பாக சென்­னை­யைச் சேர்ந்த தம்­ப­தி­யர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடந்து வரு­கிறது. மேலும், டெல்­லி­யில் உள்ள ஆப்­கான் குடி­மக்­கள் சிலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­க­ளி­டம் மத்­திய புல­னாய்வு முக­மை­கள் விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கைதா­ன­வர்­க­ளுக்கு தலி­பான், ஐஎஸ்ஐ ஆகி­ய­வற்­று­டன் ஏதே­னும் தொடர்­பு­கள் உள்­ள­னவா என்ற கோணத்­தில் விசா­ரணை நடப்­ப­தா­கத் தெரி­கிறது.

கொள்கலன் சம்பந்தமான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆந்திர நிறுவனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மத்திய புலனாய்வு முகமைகள் சிறு அணிகளாகப் பிரிந்து போதைப்பொருள் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதற்­கி­டையே டெல்லி, அக­ம­தா­பாத், காந்­தி­தாம் உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் தேடு­தல் வேட்டை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் மேலும் சிலர் சந்­தேக வளை­யத்­தின் கீழ் கொண்டு வரப்­ப­ட­லாம் என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள பெரும் தொகை தேவைப்­ப­டு­வ­தால், ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து ஹெரா­யின் போதைப்­பொ­ருளை இந்­தி­யா­வுக்கு கடத்தி, அதன் மூலம் பணம் திரட்ட பாகிஸ்­தா­னும் இந்­தி­யா­வின் எதிரி நாடு­களும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக இந்­திய உளவு அமைப்­பு­கள் மத்­திய அரசை எச்­ச­ரித்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டு உள்­ளது.