புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிரான 11 நாள் தொடர் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நேற்று தொடங்கின.
காங்கிரஸ் தலைமையில் மொத்தம் 19 எதிர்க்கட்சிகள் இணைந்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ளன. செப்டம்பர் மாத இறுதி வரை இவை நீடிக்கும் என அக்கட்சிகள் அறிவித்தன.
அதன்படி, பெங்களூரில் மாநில காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல், பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

