புதுடெல்லி: கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சுமார் 120,000 பேர் உயிரிழந்துவிட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
அன்றாட இறப்பு எண்ணிக்கை 328 ஆகும். கடந்த 2018, 2019, 2020 என மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 பேர் விபத்துகளில் இறந்துவிட்டதாக குற்ற ஆவணக் காப்பக அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே மருத்துவத்துறையின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் 133 பேரும் உள்ளாட்சி அமைப்புகளில் நிலவிய கவனக்குறைவால் 51 பேரும் பலியாகிவிட்டனர்.
இதேபோல் பொறுப்பற்ற செயல்பாடுகள் பிற துறைகளிலும் 6,367 பேரை காவு வாங்கி உள்ளதாக குற்ற ஆவணக் காப்பகத்தின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவானதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

