பெங்களூரு: தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் மூலம் பெங்களூரு நகரை நிலைகுலைய வைக்கும் திட்டத்துடன் ஊடுருவிய உளவாளியைக் காவல்துறை கைது செய்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங் என்ற அந்த ஆடவர், பாகிஸ்தான் ஆதரவைப் பெற்ற ஐஎஸ் பிரிவின் ஆதரவாளர் என்றும் தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் பெங்களூரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த ஜிதேந்தர் சிங்கை போலிசார் கைது செய்தனர்.
அவர் வீட்டைச் சோதனையிட்டபோது ராணுவ மையத்தின் முக்கிய வரைபடங்கள், பள்ளிகள், முக்கியக் கட்டடங்கள், ரயில், பேருந்து நிலைய வரைபடங்கள் இருப்பது தெரியவந்தது. பாகிஸ்தான் உளவாளி போல் செயல்பட்டு தாம் அனுப்பும் தகவல்களுக்குப் பணம் பெற்று வந்துள்ளார் ஜிதேந்தர்.

