வெளியுறவு அமைச்சு: பிரிட்டன் விதிமுறையை மாற்றுவதாகக் கூறியுள்ளது

வெளியுறவு அமைச்சு: பிரிட்டன் விதிமுறையை மாற்றுவதாகக் கூறியுள்ளது

1 mins read
6b31c5b7-0bec-4db0-8780-70e521d68048
-

புது­டெல்லி: பிரிட்­ட­னில் கோவி­ஷீல்ட் தடுப்­பூசி அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­தது பார­பட்­ச­மான செயல் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது.

பிரிட்­டிஷ் அர­சின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது அங்கு செல்­லும் இந்­திய குடி­மக்­களைப் பாதிக்­கும் என்று அமைச்­சின் செய­லா­ளர் ஹர்ஷ் வர்த்­தன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர் பிரிட்­டிஷ் அமைச்­ச­ரி­டம் பேச்­சு­வார்த்தை நடத்தி இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

"இந்­தி­யா­வில் இருந்து வரும் பய­ணி­கள் இரண்டு தடுப்­பூ­சி­கள் போட்­டுக் கொண்­ட­வர்­கள் என்­றா­லும் பிரிட்­ட­னில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை ஏற்க இய­லாது. இந்த விதி­மு­றை­யில் மாற்­றம் செய்­யப்­படும் என பிரிட்­டிஷ் அரசு உறுதி அளித்­து­ள்­ளது," என்­றார் ஹர்ஷ் வர்த்­தன்.

ஒரு­வேளை பிரச்­சினை விரை­வில் தீர்க்­கப்­ப­டா­விட்­டால், இந்­தி­யா­வும் பதில் நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அதற்­கான உரிமை இந்­தி­யா­வுக்கு உள்­ளது என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

முன்­ன­தாக இந்­தி­யப் பய­ணி­க­ளுக்கு பிரிட்­டன் வகுத்­துள்ள புதிய பயண விதி­மு­றை­கள் குறித்து அதன் வெளி­யு­றவு அமைச்­ச­ரி­டம் இந்­தி­யா­வின் மனக்­கு­றையை மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் வெளிப்­ப­டுத்தி இருந்­தார்.