தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வரதட்சணை பெற்றால் பட்டம் பறிக்கப்படும்'

1 mins read
e46d0253-5861-4d3e-80f2-5ea6462ec42e
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கோழிக்­கோடு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்த மாண­வர்­கள் வர­தட்­சணை வாங்­கி­ய­தாக நிரூ­ப­ண­மா­னால் அவர்­க­ளது பட்­டம் திரும்­பப் பெறப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் வர­தட்­சணைக் கொடு­மை­கள் அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக பல்­க­லைக்­கழக நிர்­வா­கம் தெரி­வித்­தது.

"கேர­ளா­வில் அண்­மை­யில் வர­தட்­ச­ணைக் கொடுமை உள்­ளிட்ட குடும்ப வன்­மு­றை­யால் மர­ணங்­கள் அடிக்­கடி நிகழ்ந்து வந்­ததை அடுத்து, பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இந்த யோச­னையை முன்­மொ­ழிந்­துள்­ளார்.

"மாண­வர் சேர்க்­கை­யின்­போது அளிக்­கப்­படும் படி­வத்­தில் ஒவ்­வொரு மாண­வ­ரும் பெற்­றோ­ரும், நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ வர­தட்­சணை கேட்­கவோ, கொடுக்­கவோ, பெறவோ மாட்­டேன் என்று உறு­தி­ய­ளிக்க வேண்­டும்," என அனைத்­துக் கல்­லூ­ரி­க­ளுக்­கும் பல்­க­லைக்­க­ழ­கம் அனுப்­பிய சுற்­ற­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

"உறு­தி­மொ­ழியை மீறி வர­தட்­சணை வாங்­கி­னால் எனது பட்­டத்­தைத் திரும்­பப் பெற­லாம் அல்­லது பட்­டமே அளிக்­கா­மல் இருக்­க­லாம்.

"மாண­வர் சேர்க்கையை ரத்து செய்­ய­லாம்," என்­றும் சேர்க்­கைப் படி­வத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.