மம்தா: நான் மீண்டும் முதல்வராக வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்

மம்தா: நான் மீண்டும் முதல்வராக வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்

2 mins read
f081a226-c33a-4c88-b62e-af44330e7955
-

கோல்­கத்தா: பாஜக வன்­மு­றை­யைத் தூண்­டும் கட்சி என்று மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் தாம் போட்­டி­யி­டும் பவா­னி­பூர் தொகு­தி­யில் நடை­பெற்ற இடைத்­தேர்­தல் பிர­சா­ரக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய அவர், இடைத்­தேர்­த­லில் வெற்றி பெற்­றால் மட்­டுமே தம்­மால் மாநில முதல்­வ­ராக நீடிக்க முடி­யும் என்­றும் மக்­க­ளுக்கு மாநில அர­சின் வழி சேவை­யாற்ற முடி­யும் என்­றும் கூறி­னார்.

"பாஜ­க­வைச் சேர்ந்­த­வர்­கள் தங்­கள் வீடு­களில் கூட வெடி­குண்­டு­களை வைத்­துள்­ள­னர். அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் மீது யார் தாக்­கு­தல் நடத்த முடி­யும்?

"பாஜ­க­வி­ன­ரைத் தொட்­டுப் பேசக்­கூட நாங்­கள் வெட்­கப்­ப­டு­கி­றோம்," என்­றார் முதல்­வர் மம்தா பானர்ஜி.

திரி­ணா­மூ­ல் காங்­கி­ரஸ் ரவுடி கட்சி அல்ல என்று குறிப்­பிட்ட அவர், அக்­கட்­சி­யில் முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்க தகுதி உள்ள தலை­வர்­க­ளுக்­குப் பஞ்­ச­மில்லை என்­றார்.

எனி­னும், தாம் முதல்­வ­ராக தொடர வேண்­டும் என விரும்­பி­னால், மேற்கு வங்­கத்­தில் பெய்து கொண்­டி­ருக்­கும் கன­ம­ழையை மீறி மக்­கள் வீடு­களை விட்டு வெளியே வந்து தமக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று மம்தா பானர்ஜி கேட்­டுக் கொண்­டார்.

மேற்கு வங்­கத்­தில் பாஜக தொண்­டர் ஒரு­வர் இறந்­து­விட்­டதை பெரி­து­ப­டுத்­தும் அக்­கட்­சி­யி­னர், அசாம் மாநி­லத்­தில் பாஜக ஆட்­சி­யில் பலர் கொல்­லப்­பட்­டது குறித்து மட்­டும் ஏன் ஏதும் பேச­வில்லை என கேள்வி எழுப்­பி­னார்.

"அசா­மில் சட்­டம் ஒழுங்கு என்­பது அறவே இல்லை. இதை நினைத்து உங்­க­ளுக்கு வெட்­க­மாக இல்­லையா?

"எனவே, புயல் வீசி­னா­லும் கூட பவா­னி­பூர் தொகுதி மக்­கள் எனக்கு வாக்­க­ளிக்க தேர்­தல் நாள் அன்று வீட்டை விட்டு வெளியே வர வேண்­டும்," என்று முதல்­வர் மம்தா பானர்ஜி மேலும் கூறி­னார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு தோல்வி கண்­டார் மம்தா. இதை­ய­டுத்து பவா­னி­பூர் தொகுதி இடைத்­தேர்­த­லில் அவர் மீண்­டும் கள­மி­றங்கி உள்­ளார்.