கடனில் தத்தளிக்கும் தென்னிந்தியக் குடும்பங்கள்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென்னிந்தியக் குடும்பங்கள்தான் அதிகக் கடன்சுமையில் இருக்கின்றன என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


2013-2019 காலகட்டத்திற்கான அனைத்திந்திய கடன், முதலீட்டு ஆய்வுத் தரவுகளைச் சுட்டி, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ எனும் உள்நாட்டு அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.


நகர்ப்புறத்தைப் பொறுத்தமட்டில், ஆக அதிகமாக கேரளாவில் 47.8% குடும்பங்களும் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 5.1% குடும்பங்களும் கடனில் இருக்கின்றன.


ஊரகப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், 67.2 விழுக்காட்டுடன் தெலுங்கானா முதலிடத்திலும் 6.6 விழுக்காட்டுடன் நாகலாந்து கடைசி இடத்திலும் உள்ளன.


தென்னிந்தியாவில்தான் தனிநபர் வருமானம் அதிகம் என்ற நிலையில், அம்மாநிலங்களில் கடன்பட்டிருப்பதும் அதிகமாக இருப்பது முரணாக விளங்குகிறது.


கடன் - சொத்து விகிதத்தைப் பொறுத்தமட்டில், முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களே பிடித்துள்ளன.


இந்நிலையில், கொவிட்-19 பரவலின் தாக்கம் காரணமாக கடன்சுமை மேலும் கூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. 2020 இறுதிக் காலாண்டில் 33.8 விழுக்காடாக இருந்த வீட்டுக்கடன் - மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம், நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் 37.9 விழுக்காடாக உயர்ந்துவிட்டதாக இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) தரவுகள் குறிப்பிடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!