சிறையில் இருந்தபடி கொலையை அரங்கேற்றிய ரவுடி

சிறையில் இருந்தபடி கொலையை அரங்கேற்றிய ரவுடி

1 mins read
eb5cde40-79ed-4ccb-90c3-eeeb0191c8e1
-

புது­டெல்லி: நீதி­மன்ற வளா­கத்­தில் இரு ரவுடி கும்­பல்­க­ளுக்கு இடை­யே­யான மோதலை அடுத்து நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் ஜிதேந்­தர் என்ற ரவுடி சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இவ்­வ­ழக்­கில் இரு­வர் கைதாகி உள்­ள­னர்.

ஜிதேந்­த­ருக்­கும் தில்லு தாஜ்­பு­ரியா என்ற மற்­றொரு ரவு­டிக்­கும் இடையே மோதல் நீடித்து வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஒரு வழக்­கில் சிக்கி தாஜ்­பு­ரியா சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். ஒரு வழக்கு விசா­ர­ணைக்­காக ஜிதேந்­தர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வது குறித்து தக­வ­ல­றிந்த தாஜ்­பு­ரியா, தனது ஆட்­களை ஏவி­யுள்­ளார்.

அவர்­கள் கடந்த 24ஆம் தேதி டெல்­லி­யின் ரோகிணி நகர்ப் பகு­தி­யில் உள்ள நீதி­மன்ற வளா­கத்­தில் வைத்து ஜிதேந்­தி­ராவை சுட்­டுக்­கொல்ல முயன்­ற­னர். இரு ரவுடி கும்­பல்­களும் நீதி­மன்­றத்­தில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­னர்.

இதை­ய­டுத்து, போலி­சா­ரும் பதி­லடி கொடுத்­த­னர்.

இத­னால் நீதி­மன்­றத்­தில் கூடி­யி­ருந்த பொது­மக்­கள் அல­றி­ய­டித்து ஓட்­டம் பிடித்­த­னர். எனி­னும், ஜிதேந்­தர் மான் கோகி உயி­ரி­ழந்­தார். இந்த மோதல் குறித்து சிறை­யில் இருந்த தாஜ்­பு­ரி­யா­வுக்கு நேரலை வர்­ணனை போல் கைபேசி மூலம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் டெல்லி சிறை­களில் பாது­காப்பு குறை­பா­டு­கள் இருப்­பது மீண்­டும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ள­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.