தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'புளூடூத்' காலணி மூலம் தேர்வில் மோசடி: 40 பேர் கைது

1 mins read
1d8b0727-2b88-44c0-b103-6f65aa398c80
புளூடூத் காலணி. இதன் விலை ரூ.60 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

ஜெய்ப்பூர்: அழைப்­புக் கரு­வி­கள் பொருத்­தப்­பட்ட கால­ணி­கள் மூலம் 'ரீட்' எனப்­படும் இந்­தி­யா­வின் ராஜஸ்­தான் மாநில ஆசி­ரி­யர் தகு­தித்­தேர்­வில் தில்­லு­முல்லு செய்­தது வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

இதன் தொடர்­பில் ராஜஸ்­தான் காவல் துறை­யி­னர் 40 பேரைக் கைது­ செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

பிகா­னெர் நக­ரில் 'புளூ­டூத்' அழைப்பு வச­தி­யு­டன் கூடிய செருப்பு அணிந்­தி­ருந்த ஐவர் கும்­ப­லைக் காவ­லர்­கள் கைது­செய்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், ஆறு லட்ச ரூபாய்க்கு அத்­த­கைய செருப்­பு­கள் விற்­கப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

"செருப்­பின் அடிப்­ப­கு­தி­யில் ஒரு மின்­க­ல­மும் ஒரு சிம் அட்­டை­யும் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. கேள்­வி­க­ளுக்­கான விடை­யைக் கேட்­ட­றிய உத­வி­யாக, புளூ­டூத் வச­தி­கொண்ட நுண்­ணிய கருவி, தேர்­வெ­ழு­திய மாண­வர்­க­ளின் செவிக்­குள் பொருத்­தப்­பட்­டி­ருந்­தது," என்று காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர், பணி­யி­டை­நீக்­கம் செய்­யப்­பட்ட காவல்­துறை உதவி ஆய்­வா­ளர் ஆவார்.

துள­சி­ராம் காலெர் என்­ப­வர்­தான் இந்த மோச­டி­யின் மூளை­யா­கச் செயல்­பட்­ட­வர் என்­ப­தைக் காவல்­து­றை­யி­னர் கண்­டு­பி­டித்­த­னர். பயிற்சி மையம் நடத்தி வரு­ம் அவர், இது­போன்ற மோச­டி­க­ளுக்­காக ஏற்­கெ­னவே கைதானவர். அவர் தலை­ம­றை­வா­கி­விட்டார்.