புதுடெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு காரணமான அக்கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ேஜாத் சித்து உச்சக்கட்டமாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
அவருக்கு எதிராக கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் வேளையில் உண்மைக்காக இறுதி மூச்சு வரை போராடுவவேன் என்று சூளுரைத்துள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்ட நீண்டதொரு காணொளியில் தான் தன்னுடைய தார்மீக உரிமைகளை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று நவ்ேஜாத் சித்து கூறியுள்ளார்.
"யார் மீதும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 17 ஆண்டு களாக அரசியலில் இருந்து வருகிறேன். இதுதான் என்னுடைய சமயம்," என்று அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சித்து பொறுப்பு ஏற்றதிலிருந்து உள்கட்சி பூசல் வலுத்து வந்தது.
அம்மாநிலத்தில் காங்கிரசின் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் தடாலடியாக பதவி விலகினார்.
இதையடுத்து நவ்ஜோத் சிங் முதல்வராக நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமைச்சராக இருந்த 58 வயது சரண்ஜித் சிங் சன்னியை அப்பொறுப்புக்கு காங்கிரஸ் தலைமை நியமித்தது.
அப்போது புதிய அமைச்சரவையில் நவ்ஜோத் சிங்கின் ஆதரவாளர்களுக்கு இடமளிக்கப்பபடும் என்று பேசப்பட்டது.
அதிலும் நவ்ஜோத் சித்துவுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய நவ்ஜோத் சித்துவும் பாஜகவுக்குத் தாவலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்துள்ளனர்.
இதற்கிடையே பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று நவ்ஜோத் சித்துவுக்கு புதிய முதல்வரான சரண்ஜித் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சித்துவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய அவர், "எதுவும் உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை. அரசு அைமப்பு நிய மனங்களில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். எனக்குக் கட்சிதான் முக்கியம். பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் கூறினேன்," என்றார்.

