புதுடெல்லி: புதுடெல்லி வந்து சேர்ந்த கேரளா கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
அவர் சந்தேகமான முறையில் நடந்துகொண்டதால் அவரை போலிசார் சோதனையிட்டனர்.
அப்போது ஆசனவாயில் தங்கத் தூள்களை பொட்டலங்களாக அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் எடை 900 கிராம். அவரிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

