பெங்களூருவில் அறுபது மாணவர்களுக்குத் தொற்று

பெங்களூருவில் அறுபது மாணவர்களுக்குத் தொற்று

1 mins read
19958a32-540b-4280-b6e6-0eadb8880763
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தில் 8ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை­யி­லான மாண­வர் ­க­ளுக்கு பள்­ளி­கள் திறக்­கப்­பட்டு, கடந்த ஒரு மாதத்­திற்­கும் மேலாக இயங்கி வரு­கின்­றன. இந்த நிலை­யில் பெங்­க­ளூரு அருகே ஆனேக்­கல் பகு­தி­யில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் பயி­லும் மாண­வர் ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அந்த பள்ளி விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த 400க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. இதில் 60 மாண­வர்­க­ளுக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.